செய்திகள்
கோப்புப்படம்

மே மாதத்திற்கான விலையில்லா ரேசன் பொருட்கள் இன்று முதல் விநியோகம்

Published On 2020-05-04 04:53 GMT   |   Update On 2020-05-04 04:53 GMT
தமிழகம் முழுவதும் மே மாதத்திற்கான விலையில்லா ரேசன் பொருட்கள் விநியோகிக்கும் பணி இன்று தொடங்கியது.
சென்னை:

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. 

இதற்காக கடந்த இரண்டு நாட்களாக டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், இன்று விலையில்லா ரேசன் பொருட்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது. அதில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு மட்டும் பயனாளிகள் ரேசன் கடைக்கு வந்து பொருட்களை பெற்று செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக மக்கள் கூட்டத்தை தவிர்க்க, நாளொன்றிற்கு நூறு பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்ட உள்ளன. 
Tags:    

Similar News