செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா

Published On 2020-04-29 07:44 GMT   |   Update On 2020-04-29 07:44 GMT
சென்னை மந்தைவெளியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,058 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
 
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மந்தைவெளி பகுதியில் சூப்பர் மார்க்கெட் வைத்திருந்த கடை உரிமையாளரின் குடும்பத்திற்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

சூப்பர் மார்க்கெட் கடை உரிமையாளர், அவரது மனைவி, மகள், மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சூப்பர் மார்க்கெட் கடை மூடப்பட்டது.

மேலும் சூப்பர் மார்க்கெட் கடைக்கு சென்று வந்தவர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. 
Tags:    

Similar News