செய்திகள்
வாகனங்கள் பறிமுதல்

திருவோணத்தில் தடையை மீறி வெளியில் சுற்றியவர்கள் மீது 231 வழக்குகள்

Published On 2020-04-25 14:03 GMT   |   Update On 2020-04-25 14:03 GMT
தேவையில்லாமல் வீதிகளில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது இதுவரை திருவோணம் காவல் நிலையத்தில் 231 வழக்குகள் பதியப்பட்டு 54 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருவோணம்:

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் பகுதிகளில் 144 தடையை மீறி தேவை இல்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது இதுவரை திருவோணம் காவல் நிலையத்தில் 231 வழக்குகள் பதியப்பட்டு 54 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 144 தடை உத்தரவு இருக்கும் வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வெளியில் வர வேண்டும்.

தேவையில்லாமல் வீதிகளில் சுற்றித் திரிந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து வழக்கு பதியப்பட்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என திருவோணம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News