செய்திகள்
தஞ்சையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்- கொலையா? போலீசார் விசாரணை
தஞ்சையில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சை பாலாஜி நகர் பஸ் நிறுத்தம் அருகே 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து உடனடியாக தஞ்சை தெற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர். ஆனால் இறந்தவர் யார்? என்ற விபரம் தெரியவில்லை.
இதையடுத்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நீலகிரி வட்ட கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து யாராவது கொலை செய்து தூக்கி வீசி சென்றனரா? அல்லது எப்படி இறந்தார்? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.