செய்திகள்
பீளமேடு அருகே தீ குளித்து மூதாட்டி தற்கொலை
பீளமேடு அருகே தீ குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை ஆவாரம் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சரஸ்வதி வாழ்க்கையில் விரக்தியடைந்து மண் எண்ணையை தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவென பரவியது. இதைகண்ட அக்கம் பக்கத்தினர் சரஸ்வதியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை ஆவாரம் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த சரஸ்வதி வாழ்க்கையில் விரக்தியடைந்து மண் எண்ணையை தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவென பரவியது. இதைகண்ட அக்கம் பக்கத்தினர் சரஸ்வதியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.