செய்திகள்
அமைச்சர் வேலுமணி

போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை- அமைச்சர் வேலுமணி

Published On 2020-03-30 10:11 GMT   |   Update On 2020-03-30 10:11 GMT
தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை:

கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். காய்கறி சந்தை போன்ற பொது இடங்களில் சமூக விலகலை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். வார்டு வாரியாக 100 வாகனங்களில் காய்கறிகள் விற்கப்பட்டு வருகின்றன.

மேலும் கோவையில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News