செய்திகள்
விபத்து பலி

திருமங்கலம் அருகே விபத்து: 2 வியாபாரிகள் பலி

Published On 2020-03-23 08:49 GMT   |   Update On 2020-03-23 08:49 GMT
திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் 2 வியாபாரிகள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள முத்துநாகையாபுரத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது42), ஆடு வியாபாரி. இவர் மற்றொரு வியாபாரியான குருசாமி (70)யுடன் ஆடு பார்க்க சென்றார்.

2 பேரும் மோட்டார் சைக்கிளில் பி.சுப்புலாபுரம் சென்று ஆடுகளை பார்த்தனர். பின்னர் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டனர். சின்னாரெட்டிபட்டி பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்தபோது கப்பலூர் சிட்கோ நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் வேன் எதிர் பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பால் பாண்டி மற்றும் குருசாமி தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த அவர்கள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

பேரையூர் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி திருநகரைச் சேர்ந்த வேன் டிரைவர் சமயபாண்டியை கைது செய்தனர்.

Tags:    

Similar News