செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

பெரியகுளம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

Published On 2020-03-21 11:06 GMT   |   Update On 2020-03-21 11:06 GMT
பெரியகுளம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது33).

சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றார். திரும்பி வந்துபார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 2 பவுன் நெக்லஸ், ½ பவுன் கம்மல், வெள்ளிக்கொலுசு, ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவை திருட்டு போயின. இதன் மதிப்பு ரூ.42,500 ஆகும்.

இதுபற்றி தென்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பெரியகுளம் வடக்கு பூந்தோட்டத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (50).சம்பவத்தன்று இவர் மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க சென்று விட்டார். மறு நாள் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த டி.வி. ஹோம் தியேட்டர், டி.வி.டி பிளேயர் மற்றும் ரூ.40 ஆயிரம் ஆகியவைகொள்ளை போயிருந்தன. இதன் மொத்த மதிப்பு ரூ.70 ஆயிரம் ஆகும்.

இதுபற்றி ராஜேந்திரன் பெரியகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News