செய்திகள்
கைது

குன்னம் அருகே மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கிய கணவர் கைது

Published On 2020-03-19 16:59 GMT   |   Update On 2020-03-19 16:59 GMT
குன்னம் அருகே மது குடிக்க பணம் தராத மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கொளத்தூர் கிராமம் காலனித்தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது33). இவரது மனைவி நந்தினி (28). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் முருகானந்தம் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதற்கு நந்தினி தன் கணவரை ஏதாவது வேலைக்கு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் முருகானந்தம் எந்த வேலைக்கும் செல்லாததால் நந்தினி கூலி வேலை பார்த்து வந்தார். இதையடுத்து நந்தினியிடம் மது குடிக்க அடிக்கடி பணம் கேட்டு முருகானந்தம் தராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நந்தினி பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகானந்தம் உருட்டுக்கட்டையால் நந்தினியை தாக்கினார். 

நந்தினி தலையில் பலத்த காயத்துடன் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து குன்னம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.       
Tags:    

Similar News