செய்திகள்
டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் எனக்கோரிய மனுவை ஐகோர்ட் மதுரை கிளை இன்று தள்ளுபடி செய்தது.
மதுரை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளிகள், கல்லூரிகள், சுற்றுலா தலங்கள் ஆகியவை மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என அறிவித்தது.
இதற்கிடையே, மார்ச் 31-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என வலியுறுத்தி ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பினர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சென்னையில் இது போன்ற வழக்கு விசாரணையில் உள்ளது என்ற அரசுத்தரப்பின் வாதத்தை ஐகோர்ட் ஏற்றுக் கொண்டது. இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.