செய்திகள்
தற்கொலை

போடி அருகே குடிப்பழக்கத்தால் கூலி தொழிலாளி தற்கொலை

Published On 2020-03-16 11:43 GMT   |   Update On 2020-03-16 11:43 GMT
போடி அருகே குடிப்பழக்கத்தால் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:

போடி அருகே உள்ள ஜே.கே.பட்டி முதல்வர் காலனி 9-வது தெருவைச் சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 45). கூலி வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் அவரது குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று பிராந்தியில் வி‌ஷம் கலந்து குடித்து அழகர்சாமி மயங்கி கிடந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சுப்புலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 37). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது தாய்மாமன் பழனிசாமி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

அப்போது முதல் மிகுந்த சோகத்தில் இருந்த ஜெயக்குமார் சம்பவத்தன்று தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News