செய்திகள்
நகை பறிப்பு

பெரம்பலூரில் பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2020-03-15 14:39 GMT   |   Update On 2020-03-15 14:39 GMT
பெரம்பலூரில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மேரிபுரத்தை சேர்ந்தார் செல்லதுரை மனைவி வசந்தி (வயது60). இவர் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். சம்பவத்தன்று திருச்சியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு இரவு 9 மணி அளவில் மேரிபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர்கள் வசந்தி அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்து கொண்டு பைக்கில் தப்பிசென்றனர். செயின் மதிப்பு ரூ. 3 லட்சமாகும். 

இது குறித்து வசந்தி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் நித்யா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News