என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "woman chain snatching"
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் மணியஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாமிர்தம் (வயது41). இவர் அரசு மதுபானக்கடையில் மேற் பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி கண்ணாமணி (36). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் அலங்காநல்லூர் சாலையிலுள்ள பாசிங்காபுரத்தில் இருந்து சிக்கந்தர் சாவடிக்கு சென்றனர். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வாலிபர் பின் தொடர்ந்து வந்தார்.
திடீரென பஞ்சாமிர்தம் ஓட்டிசென்ற இருசக்கர வாகனத்தில் வாலிபரின் பஞ்சாமிர்தம் வாகனம் மோதியது. நிலைகுலைந்த சமயத்தில் கண்ணாமணி அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை வாலிபர் பறிக்க முயன்றார்.
உடனே கண்ணாமணி வாலிபரின் கைகளை பிடித்து கொண்டு கூச்சலிட்டார். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து வாலிபரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேசி சோபியா, சப்- இன்ஸ்பெக்டர் கருத்தப்பாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வாலிபரிடம் விசாரனை செய்தனர். அவர் அருப்புகோட்டையை சேர்ந்த கலசலிங்கம்(25) என்று தெரியவந்தது. அவர் பறித்த நகையை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்