search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman chain snatching"

    நெய்வேலி பகுதியில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் 2 வாலிபர்களுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்தவர் சித்ரா. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இவர் கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி அந்த பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சித்ரா கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகையை பறித்து சென்றனர்.

    அதேபோல் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்த மணிபாலா (வயது 31) என்பவர் நடைபயிற்சி சென்ற போது அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகை பறிக்கப்பட்டது.

    அதுபோல் நெய்வேலி டவுன்ஷிப்பில் தேவகி என்ற பெண்ணிடம் 5 பவுன் நகையும், நெய்வேலி 12-வது வட்டம் ஜானகி என்பவரிடம் 1½ பவுன் நகையும், 20-வது வட்டத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவரிடம் 4 பவுன் நகையும் பறிக்கப்பட்டது. நெய்வேலி பகுதியில் மொத்தம் 10 பெண்களிடம் 50 பவுன் நகைகள் பறிக்கப்பட்டது.

    இது குறித்து அவர்கள் நெய்வேலி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் நடத்திய விசாரணையில் பெண்களிடம் நகை பறித்தது நெய்வேலி மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்த வசந்தராஜா (24) மற்றும் நெய்வேலியை சேர்ந்த செந்தில்குமார் (22) என்பதும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெய்வேலி கோர்ட்டில் நடந்து வந்தது.

    பின்னர் இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணை நீதிபதி கணேஷ் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அரசு வக்கீலாக தேவசுந்தரி ஆஜரானார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வசந்தராஜா, செந்தில்குமார் ஆகியோருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1½ லட்சம் அபராதம் விதித்து நீதிபதி கணேஷ் இன்று உத்தரவிட்டார்.
    பெண்ணிடம் நகை பறித்த கும்பகோணம் செயின் பறிப்பு கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
    வலங்கைமான்:

    நாகை மாவட்டம் நீரவியை சேர்ந்த செல்வராஜ் மனைவி சாந்தி (வயது 45). இவர் திருவாரூர் மாவட்டம் தொழுவூரில் உள்ள தனது சகோதரி மகளின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கிருந்து நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வலங்கைமான் சென்று சந்தையில் காய்கறி வாங்கினார். பின்னர் தொழுவூர் புறப்பட்டு சென்றார். அவரது பின்னால் உறவினர்கள் சென்றனர். 

    சாந்தி வலங்கைமான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் சாந்தி அணிந்திருந்த செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். 

    இதைத்தொடர்ந்து அவருடன் வந்த உறவினர்கள் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்களையும் விரட்டி சென்றனர். இதில் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தங்கள் அருகில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தனர். இதில் சாந்தியின் உறவினர்கள் 2 பேர் காயமடைந்தனர். 

    சுமார் 4 கி.மீ வரை போக்கு காட்டிய கொள்ளையர்கள் வந்த ரோட்டில் தொடர்ந்து செல்ல முடியாததால் மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்குகளை அணைத்துவிட்டு வந்த வழியிலேயே திரும்பி வந்தனர். 

    இதனை அறிந்த சாந்தியின் உறவினர்கள் வலங்கைமான் கடைவீதியில் வைத்து 2 கொள்ளையர்களையும் பிடித்து வலங்கைமான் போலீசில் ஒப்படைத்தனர். 
    மதுரை அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் மணியஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாமிர்தம் (வயது41). இவர் அரசு மதுபானக்கடையில் மேற் பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி கண்ணாமணி (36). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் அலங்காநல்லூர் சாலையிலுள்ள பாசிங்காபுரத்தில் இருந்து சிக்கந்தர் சாவடிக்கு சென்றனர். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வாலிபர் பின் தொடர்ந்து வந்தார்.

    திடீரென பஞ்சாமிர்தம் ஓட்டிசென்ற இருசக்கர வாகனத்தில் வாலிபரின் பஞ்சாமிர்தம் வாகனம் மோதியது. நிலைகுலைந்த சமயத்தில் கண்ணாமணி அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை வாலிபர் பறிக்க முயன்றார்.

    உடனே கண்ணாமணி வாலிபரின் கைகளை பிடித்து கொண்டு கூச்சலிட்டார். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து வாலிபரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரேசி சோபியா, சப்- இன்ஸ்பெக்டர் கருத்தப்பாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வாலிபரிடம் விசாரனை செய்தனர். அவர் அருப்புகோட்டையை சேர்ந்த கலசலிங்கம்(25) என்று தெரியவந்தது. அவர் பறித்த நகையை போலீசார் கைப்பற்றி தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    கரூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் முகமூடி கொள்ளையர்கள் கழுத்தில் கடந்த செயினை பறித்து சென்றனர்.
    கரூர்:

    கரூர் அருகே முச்சகொட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நதியா (வயது 24). நேற்று இரவு தங்கராஜ் வெளியே சென்று விட்டார். இதனால் நதியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    அப்போது ஒரு பைக் தங்கராஜ் வீட்டின் முன்பு வந்து நின்றுள்ளது. அதில் இருந்து முகமூடி அணிந்த 3 பேர் வீட்டிற்குள் அடாவடியாக புகுந்துள்ளனர். மேலும் சத்தம் போட்டால் கழுத்தை அறுத்துவிடுவோம் என நதியாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்னர். இதனால் நதியா அதிர்ச்சியில் உறைந்தார். அதனை தொடர்ந்து மர்ம நபர்கள் வீட்டில்  உள்ள தங்கம், பணம் போன்றவற்றை தேடியுள்ளனர். பின்னர் நதியாவின் கழுத்தில் கிடந்த 6 1/2 பவுன் செயினை பறித்துள்ளர். கண்ணிமைக்கும் நேரத்தில் முகமூடி திருடர்கள் 3 பேரும் பைக்கில் தப்பி சென்றனர்.

    இது குறித்து கரூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளை சம்பவம் நடந்த நேரத்தில் தங்கராஜ் வீட்டில் இல்லை. இதனால் கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
    ×