search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "robbers arrested"

    • திருமங்கலம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்கள் விருதுநகரை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி லாலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் மகன் அருண்பாண்டியன்(வயது 25). இவர் காரியாபட்டியில் உள்ள சாம்சங் கம்பெனியில் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார் .

    சம்பவத்தன்று அருண் பாண்டியன் காரியாபட்டியில் வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    கள்ளிக்குடி- டி.கல்லுப்பட்டி ரோட்டில் வடக்கம் பட்டி பிரிவு அருகே சென்ற போது 3 பேர் திடீரென வழிமறித்து மிரட்டினர். பின்னர் அருண் குமார் பையில் இருந்த ரூ.500 பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.

    கள்ளிக்குடி காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன்(38). லோடு மேனான இவர் வில்லூர் கிராமத்தில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிள் வந்த இவரை 3 பேர் மிரட்டி ரூ. ஆயிரம் பறித்து சென்றனர்.

    இதுகுறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் 2 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பல் என தெரியவந்தது. இதைய டுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட விருதுநகர் ஆலம்பட்டியை சேர்ந்த கிஷோர், பிரவீன் குமார், மாரீஸ்வரன் ஆகியோ ரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் பல்வேறு இடங்களில் நகை -பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங் களில் ஈடுபட்டிருக்கலாம் என ெதரிகிறது. இதன் அடிப்படை யில் விசாரணை நடந்து வருகிறது.

    • வழிப்பறியில் ஈடுபட்ட 5 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை விளாச்சேரியை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியம் (வயது 43). இவர் டாஸ்மாக் கடையில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். பாலசுப்பிரமணியன் விளாச்சேரி, கலைஞர் நகரில் நடந்து சென்றார்.

    அப்போது அங்கு வந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டனர். இதற்கு அவர் தர மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த 2 பேரும், பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி விட்டு ரூ. 450 -ஐ பறித்து சென்றது.

    இது தொடர்பாக பாலசுப்பிரமணியன், திருநகர் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வளையப்பட்டி, மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீமைராஜா (வயது 43) என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான திருநகர் பிரவீன் என்பவரை தேடி வருகின்றனர்.

    மதுரை கே.புதூர் முத்துராமலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன்(26) இவர் தபால் தந்தி நகரில் உள்ள ஒயின் ஷாப்பில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.

    ராஜசேகரன் சிப்ஸ் கடை முன்பாக நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.900த்தை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக ராஜசேகரன், தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட பீ.பி.குளம் காந்திஜி தெரு, கோகுல்விஜய்(29), பி.பி.குளம் இந்திரா நகர், சுதாகரன்(45) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களில் சுதாகரன் மீது போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    மதுரை மேலவாசல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சரவணன் மகன் நிதீஷ்குமார் (23). இவர் இரவு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 600-ஐ பறித்துச் சென்றார். இது தொடர்பாக திடீர்நகர் போலீசில் நிதிஷ்குமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 28), ரெயில்வே ஊழியர். இவர் மதுரை ரெயில் நிலைய கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் நின்றபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

    இதற்கு பாலமுருகன் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டி அவர் வைத்திருந்த ரூ. 2,500-ஐ பறித்துச் சென்று விட்டார். இது தொடர்பாக பாலமுருகன், திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட தக்காளி கணேசன் என்பவரை தேடி வருகின்றனர்.

    • தூத்துக்குடியை சேர்ந்த ஸ்ரீராமன் போக்சோ வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது திருட்டு வழக்கில் சிறையில் இருந்த சேர்மதுரை, பாலகிருஷ்ணன் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
    • 3 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் சிறையை விட்டு வெளியே வந்த ஸ்ரீராமனை பொள்ளாச்சியில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.

    பொள்ளாச்சி:

    கோவை பொள்ளாச்சி மாவட்டம் அருகே சூளேஸ்வரன்பட்டியில் கடந்த 9-ந்தேதி சிக்கந்தர் என்பவர், வீட்டை பூட்டி விட்டு கோட்டூர் ரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு மனைவியுடன் சென்றார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 13 பவுன் நகை, ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றனர். சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததால் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடி மாவட்டம் திருவரங்கம்பட்டியை சேர்ந்த மணி என்ற பாலகிருஷ்ணன் (36), தென்காசி மாவட்டம் குறும்பலாப்பேரியை சேர்ந்த சேர்மதுரை (28) , நெல்லை பாளையம்செட்டி குளத்தை சேர்ந்த அந்தோணி என்ற அருவாபாண்டி (22), தென்காசி சாலடியூரை சேர்ந்த மணிகண்டன் (28), தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்ரீராமன் (38) என்பது தெரியவந்தது. பவானியில் பதுங்கி இருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதானவர்களிடம் இருந்து 58 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் கைதான நபர்களில் ஸ்ரீராமன் தவிர மற்ற 4 பேர் மீதும் தமிழகம் முழுவதும் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.

    தூத்துக்குடியை சேர்ந்த ஸ்ரீராமன் போக்சோ வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது திருட்டு வழக்கில் சிறையில் இருந்த சேர்மதுரை, பாலகிருஷ்ணன் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து 3 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டனர். பின்னர் சிறையை விட்டு வெளியே வந்த ஸ்ரீராமனை பொள்ளாச்சியில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார்.

    பாலகிருஷ்ணணும், சேர்மதுரையும், ஸ்ரீராமனை தொடர்புகொண்டு தீபாவளிக்கு பொள்ளாச்சிக்கு வருவதாக தெரிவித்து உள்ளனர். இதையடுத்து பொள்ளாச்சிக்கு வந்ததும் 3 பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது பாலகிருஷ்ணணும், சேர்மதுரையும் கேரளாவுக்கு சென்று நகை, பணத்தை திருட செல்கிறோம் என்று கூறினர். அதற்கு போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ஸ்ரீராம் கேரளாவுக்கு ஏன் செல்ல வேண்டும். பொள்ளாச்சிலேயே கைவரிசை காட்டலாம் என்று கூறி உள்ளார்.

    அதன்பிறகு சூளேஸ்வரன்பட்டிக்கு சென்று நகைகளை திருடிவிட்டு, 3 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிக்கு சென்று உள்ளனர். இவர்களுக்கு அருவா பாண்டியும், மணிகண்டனும் உதவியாக இருந்துள்ளனர்.

    திருடிய நகைகளை விற்ற பணத்தில் 5 பேரும் விலை உயர்ந்த மதுபாட்டில்களை வாங்கி மது அருந்தி உள்ளனர். மேலும் அழகிகளுடன் உல்லாசமாக இருந்து பணத்தை செலவழித்து உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

    கைதான 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பொள்ளாச்சி கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த மினி வேனை காணவில்லை.
    • கோட்டக்குப்பம் பகுதியில் காணாமல் போன மினி வேன் நெய்வேலியில் உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள கோட்டக்குப்பம் பகுதி சின்னமு தலியா ர்சாவடியைச் சேர்ந்தவர் வினோத்(28). இவர் சொந்தமாக மினிவேன் வைத்துள்ளார். கடந்த 12ந் தேதி இரவு தனது வீட்டிற்கு வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுவிட்டார். காலையில் எழுந்து வெளியில் வந்து பார்க்கும் போது வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த மினி வேனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வினோத் அக்கம் பக்கம் உள்ளவ ர்களிடம் விசாரித்தார்.

    இதனைத் தொடர்ந்து கோட்டக்கு ப்பம் காவல் நிலையத்தில் வினோத் புகார் அளித்தார். இதுகுறித்து கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்குபதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்நி லையில் கோட்டக்குப்பம் பகுதியில் காணாமல் போன மினி வேன் நெய்வேலியில் உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக நெய்வேலி காவல்துறையினரின் உதவியுடன் கோட்டக்குப்பம் போலீசார் மினிவேனை கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசா ரணையில் கடலூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்(24), குறிஞ்சி ப்பாடியைச் சேர்ந்த மருதுபா ண்டி(22) ஆகியோர் மினி வேனை திருடிச் சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது.இவ்விருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மினி வேனை மீட்டு சின்ன முதலியார்சாவடி வினோத்தி டம் ஒப்படைத்தனர். மேலும் மினி வேனை திருடிய இருவரையும் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.

    இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை தாக்கி பணம், நகைகளை வழிப்பறி செய்த 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது48). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 7-ந்தேதி காளையார் கோவில் பகுதியில் பணம் வசூல்செய்து விட்டு கருப்புராஜா (28) என்பவருடன் சிவகங்கைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிவந்தார்.

    அவர்கள் நாட்டரசன்கோட்டை அருகே உள்ள கண்டனி பட்டி அருகில் வரும்போது ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ.50ஆயிரம், தங்க நகை, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றது.

    இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில், சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி தலைமையில் காளையார் கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், தலைமை காவலர்கள் கண்ணன், ஸ்ரீராஜ் கண்ணன், நாகபிரபு, கார்மேக கண்ணன் உள்ளிட்டவர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் சிவகங்கை சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் சபரிதாசன் உதவியுடன் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட கும்பல் இதில் ஈடுபட்டது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பரமக்குடி, முத்தாலம்மன் கோவில் படித்துரையை சேர்ந்த, முத்துராசு தூக்குதுரை (வயது24), திருப்பத்தூரை அடுத்த கருப்பூர் கிராமத்தை சேர்ந்த மவுன்டன் என்ற மலைச்சாமி (28), மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த ஏ.கோவில்பட்டியை சேர்ந்த சத்யபிரபு (26), காளையார்கோவிலை அடுத்த கிழக்கு ஒத்தவீடுபகுதியை சேர்ந்த பாலா என்ற பாலமுருகன் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    இருசக்கர வாகனம், ஆயுதம் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    சங்கரன்கோவில் பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த பாறை பட்டி, பிள்ளைகுளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 கோவில்களில் கொள்ளை நடந்தது. இது தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் சித்ரகலா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் நாகை மாவட்டம் திருகுவளை பகுதியை சேர்ந்த மாரியப்பன் (வயது25), அரவிந்தன் (எ) ரூபன்ராஜ் (23), பாலசிங்கம் (24) ஆகியோர் என்பதும், இவர்கள் பிரபல கொள்ளையர்கள் என்றும் தெரியவந்தது.

    3 பேரும் சங்கரன்கோவில் பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். மாரியப்பன் பைக்கில் சென்று கொள்ளையடிப்பதும், அதற்கு மற்ற 2 பேரும் உதவியாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    காஞ்சீபுரம் பகுதியில் வீடு புகுந்து திருடிய 2 கொள்ளையர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 125 பவுன் நகைகளை மீட்டனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம், வாலாஜா பாத், பாலுசெட்டிசத்திரம், ஒரகடம் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக வீட்டின் பூட்டை உடைத்து அடிக்கடி கொள்ளை நடைபெற்று வந்தது.

    இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதி மானி உத்திரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

    காஞ்சீபுரம் நகர டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், வெற்றிச்செல்வன், பழனி, திருநாவுக்கரசு, மணிமாறன் உள்ளிட்டோர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.

    காஞ்சீபுரம் அடுத்த தென்னேரி-வாலாஜாபாத் சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அவர்களை துரத்தி சென்று பிடித்தனர்.

    அவர்களிடம் விசாரித்த போது, பல இடங்களில் வீடுபுகுந்து கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். அவர்கள் திருச்சியைச் சேர்ந்த சிங்காரவேலன், வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும் தெரிய வந்தது.

    கடந்த 6 மாதங்களாக அவர்கள் பாலுசெட்டி சத்திரம், வாலாஜாபாத், ஒரகடம் ஆகிய பகுதிகளில் பகல் மற்றும் இரவு வேளைகளில் பூட்டப்பட்டிருக்கும் வீடுகளில் பூட்டை உடைத்து நகைகளை திருடி வந்தது தெரிந்தது.

    அவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான 125 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மீட்கப்பட்ட நகைகளை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி பார்வையிட்டார். கொள்ளையர்களை பிடித்த போலீசாரை அவர் பாராட்டினார்.

    பெண்ணிடம் நகை பறித்த கும்பகோணம் செயின் பறிப்பு கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
    வலங்கைமான்:

    நாகை மாவட்டம் நீரவியை சேர்ந்த செல்வராஜ் மனைவி சாந்தி (வயது 45). இவர் திருவாரூர் மாவட்டம் தொழுவூரில் உள்ள தனது சகோதரி மகளின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கிருந்து நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வலங்கைமான் சென்று சந்தையில் காய்கறி வாங்கினார். பின்னர் தொழுவூர் புறப்பட்டு சென்றார். அவரது பின்னால் உறவினர்கள் சென்றனர். 

    சாந்தி வலங்கைமான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் சாந்தி அணிந்திருந்த செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். 

    இதைத்தொடர்ந்து அவருடன் வந்த உறவினர்கள் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்களையும் விரட்டி சென்றனர். இதில் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தங்கள் அருகில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தனர். இதில் சாந்தியின் உறவினர்கள் 2 பேர் காயமடைந்தனர். 

    சுமார் 4 கி.மீ வரை போக்கு காட்டிய கொள்ளையர்கள் வந்த ரோட்டில் தொடர்ந்து செல்ல முடியாததால் மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்குகளை அணைத்துவிட்டு வந்த வழியிலேயே திரும்பி வந்தனர். 

    இதனை அறிந்த சாந்தியின் உறவினர்கள் வலங்கைமான் கடைவீதியில் வைத்து 2 கொள்ளையர்களையும் பிடித்து வலங்கைமான் போலீசில் ஒப்படைத்தனர். 
    ×