செய்திகள்
தற்கொலை

திருமணமான 5 மாதத்தில் தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை

Published On 2020-03-15 08:59 GMT   |   Update On 2020-03-15 08:59 GMT
கோவை போத்தனூர் அருகே குடும்ப தகராறு காரணமாக திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை போத்தனூர் அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் சோனைராஜ். இவரது மனைவி பிரியா (வயது 23).

இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று வீட்டில் தனியாக இருந்த பிரியா அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட பிரியாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிரியா குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பிரியா திருமணமான 5 மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News