செய்திகள்
கைது

காரியாபட்டியில் திருமண ஆசை காட்டி நர்சை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Published On 2020-03-14 10:16 GMT   |   Update On 2020-03-14 10:16 GMT
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே நர்சிடம் திருமண ஆசை காட்டி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பாலையம்பட்டி:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள கே.செவல்பட்டி அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் அழகுராஜா (வயது 28), கூலித் தொழிலாளி.

அதே ஊரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகள் செல்வி (19). ஈரோட்டில் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வரும் இவர், அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

நானும், அழகுராஜாவும் ஒரே ஊர் என்பதால் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. என்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் உறுதியளித்தார்.

இதனை நம்பி நான் அவருடன் நெருங்கி பழகினேன். இதனால் நான் கர்ப்பமானேன். இந்த நிலையில் திருமணம் செய்யும்படி அழகு ராஜாவிடம் கூறினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, அழகுராஜாவை கைது செய்தனர்.
Tags:    

Similar News