செய்திகள்
கைது

மேட்டுப்பாளையத்தில் மனைவியை தாக்கிய தொழிலாளி கைது

Published On 2020-03-12 10:30 GMT   |   Update On 2020-03-12 10:30 GMT
மேட்டுப்பாளையத்தில் மனைவியை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

மேட்டுப்பாளையம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (35). தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை (30). இவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். நாகராஜுக்கு குடிப்பழக்கம் உள்ளது.

இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதனால் மணிமேகலை கோபித்துக் கொண்டு தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையம் ஆலங்கொம்பில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று நாகராஜ் மனைவி வீட்டுக்கு வந்து திடீரென தகராறில் ஈடுபட்டார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி மணிமேகலையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதில் பலத்த காயமடைந்த மணிமேகலை இதுகுறித்து சிறுமுகை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.

Tags:    

Similar News