செய்திகள்
பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தவரிடம் செல்போன் திருடியவர் கைது
திருச்சியில் சாலையோர கடையில் இரவு பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்த நபரிடம் செல்போனை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சியில் ஈ. பி. ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள சாலையோர கடையில் இரவு பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் இவர் சாப்பிட்டுவிட்டு கை கழுவும் நேரத்தில் இவரின் மேல் பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயன்றார்.
அப்போது அவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.