செய்திகள்
கரூர் அருகே இளம்பெண் மாயம்- போலீசில் புகார்
கரூர் அருகே கல்லூரிக்கு சென்ற இளம்பெண் வீடு திரும்பாதது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
கரூர்:
கரூர் மாவட்டம் தெற்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் சுகந்தன். இவரது மகள் ஹரிப்பிரியா (வயது 18). புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வருகிறார்.
கடந்த 4-ந்தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஹரிப்பிரியா இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள், கல்லூரி என்று பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தான்தோன்றி மலை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் ஹரிபிரியாவை தேடி வருகின்றனர்.