செய்திகள்
மரணம்

சேரன்மகாதேவி அருகே கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலி

Published On 2020-03-09 08:23 GMT   |   Update On 2020-03-09 08:23 GMT
சேரன்மகாதேவி அருகே கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கனாங்குளம் பட்டன்காட்டை சேர்ந்தவர் ரமேஷ் (வயது32), மரம் வெட்டும் தொழிலாளி. இவருக்கு பிரேமா (30) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். நேற்று மாலை கங்கனாங்குளத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்ற ரமேஷ் அங்குள்ள மணிமுத்தன் கால்வாயில் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவரால் கரைக்கு திரும்ப முடியவில்லை. மேலும் அவர் தண்ணீரில் மூழ்கினார். அப்போது அவர் தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக வந்து ரமேசை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் ரமேஷ் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார்.

உடனே இதுகுறித்து அங்கிருந்தவர்கள் சேரன்மகாதேவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் ரமேசின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News