செய்திகள்
திசையன்விளை அருகே அரசு பஸ் மோதி கட்டிட தொழிலாளி பலி
திசையன்விளை அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை:
திசையன்விளை அருகே உள்ள மிட்டாதார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்சிங் (வயது 35). இவர் கட்டிடங்களுக்கு “பால்சீலிங்” செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு இவர் வேலை முடிந்து மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பினார். கோட்டை கருங்குளம் அருகே மோட்டார்சைக்கிள் வந்த போது, எதிரே வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பொன்சிங் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான குமரிமாவட்டம் வில்லுக்குறியைச் சேர்ந்த வேலு தமிழழகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திசையன்விளை அருகே உள்ள மிட்டாதார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்சிங் (வயது 35). இவர் கட்டிடங்களுக்கு “பால்சீலிங்” செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு இவர் வேலை முடிந்து மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பினார். கோட்டை கருங்குளம் அருகே மோட்டார்சைக்கிள் வந்த போது, எதிரே வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பொன்சிங் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான குமரிமாவட்டம் வில்லுக்குறியைச் சேர்ந்த வேலு தமிழழகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.