செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இஸ்லாமிய அமைப்பினர் சந்திப்பு
கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இஸ்லாமிய அமைப்பினர் சந்தித்து பேசினர்.
கோவை:
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் அமைப்பினர் கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தனர். அதில், என்பிஆர், என்ஆர்சியை அமல்படுத்த மாட்டோம் என தமிழக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரியிருந்தனர்.