செய்திகள்
தற்கொலை

திண்டுக்கல் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை

Published On 2020-03-02 11:01 GMT   |   Update On 2020-03-02 11:01 GMT
திண்டுக்கல் அருகே மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து காலனி தெருவைச் சேர்ந்தவர் மணிராஜ் (வயது 36). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பெரியக்காள். இவர்களுக்கு பவித்ரா, சூர்ய பிரகாஷ் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். பெரியக்காள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

அதன் பிறகு தனது 2 குழந்தைகளையும் மாமியார் வீட்டில் வைத்து பராமரித்து வந்தார். மனைவி இறந்த சோகத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

சம்பவத்தன்று தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், ஏட்டு வனராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News