செய்திகள்
தற்கொலை

வில்லியனூர் அருகே தனியார் பள்ளி வேன் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2020-02-28 09:26 GMT   |   Update On 2020-02-28 09:26 GMT
வில்லியனூர் அருகே திருமணம் செய்து கொள்ள பெற்றோர் வற்புறுத்தியதால் தனியார் பள்ளி வேன் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே கீழூர் களத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் ரத்தினம், விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகன் ரகு (வயது35) இவர் தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் விரும்பினர். ஆனால் இதற்கு ரகு சம்மதிக்காமல் காலம் கடத்தி வந்தார்.

ஆனாலும் ரகுவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து உறவினர் பெண்ணை தேர்வு செய்து ஜாதக பொருத்தம் பார்த்தனர். இந்த தகவலை ரகுவிடம் பெற்றோர் தெரிவித்தனர். ஆனால் ரகு இதுபற்றி எந்த முடிவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரகு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு படுக்கை அறைக்கு துங்க சென்றார். ஆனால் காலையில் வெகுநேரமாகியும் ரகு எழுந்திருக்கவில்லை. கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது ஊஞ்சல் கொக்கியில் வேட்டியால் தூக்குபோட்டு ரகு பிணமாக தொங்குவதை கண்டு திடுக்கிட்டனர்.

திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாமல் ரகு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ரகுவின் தந்தை ரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News