செய்திகள்
புளியமரத்தில் ஷேர் ஆட்டோ மோதியது- பயணிகள் 5 பேர் காயம்
கிருஷ்ணகிரியில் ஷேர் ஆட்டோ புளியமரத்தில் மோதிய விபத்தில் பயணிகள் 5 பேர் காயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை நோக்கி நேற்று ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 5 பயணிகள் இருந்தனர்.
ஆட்டோ மரிக்கம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில், தர்மபுரி மாவட்டம் கொட்டு மாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜன் மனைவி மகாலட்சுமி(40) மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த சூடம்மா, கங்கா, சிலம்பரசன், வேலன் ஆகிய 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.