செய்திகள்
மரணம்

காரிமங்கலம் அருகே வாலிபர் திடீர் மரணம்

Published On 2020-02-26 13:15 GMT   |   Update On 2020-02-26 13:15 GMT
காரிமங்கலம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் திடீரென மரணம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள பாமாண்டபட்டி பகுதியை சேர்ந்தவர் சிவன். இவருக்கு தமிழரசன் (வயது 19) என்ற மகன் உள்ளார். இவர் சிறுசிறு கூலி வேலைகளுக்கு சென்று வருவது வழக்கம். 

இந்த நிலையில் தமிழரசன் சம்பவத்தன்று பச்சனம்பட்டி பகுதியில் நெல்அறுவடைக்காக மிஷின் கொண்டு சென்ற பூபதிக்கு உதவியாளராக சென்றிருந்தார். அங்கு திடீரென தமிழரசனுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தமிழரசனை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் சோதனை செய்துவிட்டு தமிழரசனின் குடலில் காயம் இருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து தமிழரசனுக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டது.

 பின்னர் மேல்சிகிச்சைக்காக தமிழரசனை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தமிழரசன் எனக்கு ஏற்கனவே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது வயிற்றில் அடிபட்டது எனக் கூறியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழரசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் தமிழரசன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News