செய்திகள்
மீட்பு

கச்சத்தீவு அருகே கடல் சீற்றத்தில் 2 படகுகள் மூழ்கின- 12 மீனவர்கள் மீட்பு

Published On 2020-02-25 08:12 GMT   |   Update On 2020-02-25 08:12 GMT
கடல் சீற்றம் காரணமாக 2 விசைப்படகுகள் நடுக்கடலில் மூழ்கின. அதில் இருந்த 12 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 400 விசைப்படகுகளில் சுமார் 2,500 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது இரவில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் ராட்சத அலைகள் எழும்பின.

இதனால் படகுகள் தள்ளாடின. அலையின் வேகத்தில் எட்வின் என்பவரது விசைப்படகு நீரில் மூழ்கியது. அதில் இருந்த மீனவர்களை மற்ற படகுகளில் இருந்தவர்கள் மீட்டனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகும் கடலில் மூழ்கியது. அதில் இருந்த மீனவர்கள் குமார், ராமன், மாரிமுத்து, ரவி, முத்துராமலிங்கம், மற்றொரு குமார், ஆகியோர் சக மீனவர்களால் மீட்கப்பட்டனர்.

Tags:    

Similar News