செய்திகள்
கள்ளிக்குடி அருகே மொபட்டில் சென்ற மாணவன் வேன் மோதி பலி
கள்ளிக்குடி அருகே மொபட்டில் சென்ற மாணவன் வேன் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே கள்ளிக்குடி போலீஸ் சரகத்தில் உள்ள குராயூரைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் நாகராஜ் (வயது14). கே.தென்னம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
செங்கல்படையில் இருந்து குராயூருக்கு நாகராஜ் மொபட்டில் மாட்டுத்தீவனம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அங்குள்ள 4 வழிச்சாலையை கடக்க முயன்றபோது திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் நோக்கி வந்த வேன் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருமங்கலம் அருகே கள்ளிக்குடி போலீஸ் சரகத்தில் உள்ள குராயூரைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் நாகராஜ் (வயது14). கே.தென்னம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
செங்கல்படையில் இருந்து குராயூருக்கு நாகராஜ் மொபட்டில் மாட்டுத்தீவனம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அங்குள்ள 4 வழிச்சாலையை கடக்க முயன்றபோது திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் நோக்கி வந்த வேன் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.