செய்திகள்
விபத்து

லாரி மோதி ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் பலி

Published On 2020-02-23 17:07 GMT   |   Update On 2020-02-23 17:07 GMT
திருச்சியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் பலியானார்.
திருச்சி:

திருச்சி மன்னார்புரம் முதல்தெரு நியூ காலனி பகுதியை சேர்ந்தவர் தர்மநாதன் (வயது 68). இவர் ரெயில்வேயில் உதவி நூலகராகப்  பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்தநிலையில் தர்மநாதன் தனது இருசக்கர வாகனத்தில் மன்னார்புரத்திலிருந்து டோல்கேட் பகுதிக்கு சென்றார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட தர்மநாதன்பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொன்மலை ரெயில்வே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் இன்று அதிகாலை தர்மநாதன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதுபற்றி திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.     
Tags:    

Similar News