செய்திகள்
திருப்பூரில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருப்பூரில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர தெற்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட தாராபுரம் ரோட்டில் கடந்த ஆண்டு பணம் மற்றும் நகைக்காக ராமச்சந்திரன் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக விழுப்புரம் செஞ்சியை சேர்ந்த ராஜதுரை(வயது 22), புதுக்கோட்டை திருமயம் அறிமலத்தை சேர்ந்த சமயபாண்டி(24) ஆகிய 2 பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 2 பேரும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதால் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி ராஜதுரை, சமயபாண்டி 2 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
திருப்பூர் மாநகர தெற்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட தாராபுரம் ரோட்டில் கடந்த ஆண்டு பணம் மற்றும் நகைக்காக ராமச்சந்திரன் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக விழுப்புரம் செஞ்சியை சேர்ந்த ராஜதுரை(வயது 22), புதுக்கோட்டை திருமயம் அறிமலத்தை சேர்ந்த சமயபாண்டி(24) ஆகிய 2 பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் 2 பேரும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதால் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார்.
அதன்படி ராஜதுரை, சமயபாண்டி 2 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.