செய்திகள்
பாப்பாரப்பட்டி அருகே 11-ம் வகுப்பு மாணவி மாயம்
பாப்பாரப்பட்டி அருகே 11-ம் வகுப்பு மாணவி கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். அவர் வீடு திரும்பாதது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை அடுத்துள்ள மாக்கனூர் குஞ்சிகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி அன்று மாணவி கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பிவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து மாணவியின் தாத்தா பாப்பாரப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணமான மாணவியை தேடி வருகின்றனர்.