செய்திகள்
தற்கொலை

பூந்தமல்லி அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

Published On 2020-02-21 06:58 GMT   |   Update On 2020-02-21 06:58 GMT
பூந்தமல்லி அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த சொக்கநல்லூர் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்தவர் மணிகண்டன்.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் 4 மாதங்களாக இங்கு வேலை பார்த்தார். இந்நிலையில் நேற்று மணிகண்டன் வேலைக்கு வரவில்லை. அவரை தேடிய போது பெட்ரோல் பங்க் அருகில் உள்ள தொழிலாளர்களுக்கான சமையல் அறையில் உள்ள கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்கின் மேலாளர் மூர்த்தி உடனடியாக மணிகண்டனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த வெள்ளவேடு போலீசார் மணிகண்டனின் பிரேதத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் காதல் தோல்வியால் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. வெள்ளவேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News