செய்திகள்
தளவாபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
தளவாபாளையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே தர்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாயவன் (வயது 33). இவர் தனது மோட்டார் சைக்கிளில் தளவாபாளையம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது ஈரோடு மாவட்டம் கனிராவுத்தர்குளம் பகுதியைச் சேர்ந்த சூரிய நாராயணபெருமாள் (31) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மாயவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீதுநேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் மாயவன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாயவன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்துவேலாயுதம் பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.