செய்திகள்
கண்ணமங்கலம் அருகே பஸ் மோதி மேஸ்திரி பலி
கண்ணமங்கலம் அருகே பஸ் மோதி மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளத்தை சேர்ந்தவர், பூபதி (வயது46). கட்டிட மேஸ்திரி இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு பூபதி சாலையை கடக்க முயன்றார்.
அப்போது கடலூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ் பூபதி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பூபதி படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கண்ணமங்கலம் அடுத்த வண்ணாங்குளத்தை சேர்ந்தவர், பூபதி (வயது46). கட்டிட மேஸ்திரி இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு பூபதி சாலையை கடக்க முயன்றார்.
அப்போது கடலூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ் பூபதி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பூபதி படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.