செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் பாதிப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி

Published On 2020-02-18 07:47 GMT   |   Update On 2020-02-18 07:47 GMT
தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் பாதிப்பு இல்லை என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை:

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தமிழ் மண்ணில் பிறந்த யாருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் பாதிப்பு இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் எந்த சிறுபான்மையினருக்கும் பாதிப்பு இல்லை. அந்த சட்டத்தை திரும்பபெறும் அதிகாரமும் எங்களிடம் இல்லை. அந்த அதிகாரம் மத்திய அரசிடம்தான் இருக்கிறது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள் என திமுக விளக்க வேண்டும். குடியுரிமை சட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள். 

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Tags:    

Similar News