செய்திகள்
மாயம்

திருச்செந்தூரில் இளம்பெண்-முதியவர் மாயம்

Published On 2020-02-17 12:35 GMT   |   Update On 2020-02-17 12:35 GMT
திருச்செந்தூரில் இளம்பெண் மற்றும் முதியவர் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி நகரை சேர்ந்தவர் சின்னத் தம்பி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், முனீஸ்வரி (வயது17) என்ற மகளும் உள்ளனர். முனீஸ்வரி 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு அப்பகுதியில் உள்ள பேன்ஸி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 15-ந்தேதி வேலைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான முனீஸ்வரியை தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் செல்லையா (83). இவர் கடந்த 13-ந்தேதி கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். இரவில் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்து திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான செல்லையாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News