செய்திகள்
மாணவி மரணம்

வி‌ஷம் குடித்து வகுப்பறைக்கு வந்த பிளஸ்-1 மாணவி மரணம்

Published On 2020-02-17 10:40 GMT   |   Update On 2020-02-17 10:54 GMT
கோவையில் படிப்பு சரியாக வராததால் வி‌ஷம் குடித்து வகுப்பறைக்கு வந்த பிளஸ்-1 மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை:

கோவை அன்னூர் கரிய கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் டெய்லர். இவரது மகள் மகா பார்கவி (வயது 16). இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்தநிலையில் மகா பார்கவி சரியாக படிக்காததால் பெற்றோர் வீட்டின் சூழ்நிலையை அறிந்து நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறி வந்தனர். ஆனால் மகாபார்கவி தனக்கு படிப்பு சரியாக வராததை நினைத்து மனவேதனையுடன் காணப்பட்டார்.

இதனால் விரக்தியடைந்து சம்பவத்தன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். அங்கு திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி ஊழியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

அப்போது அவர் வீட்டில் பூச்சி மருந்து குடித்து பள்ளிக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி ஊழியர்கள் மாணவியின் தந்தை புஷ்பராஜூக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மாணவியை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு மகாபார்கவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News