செய்திகள்
தற்கொலை

திருவேங்கடம்-கடையநல்லூரில் வி‌ஷம் குடித்த 2 மாணவர்கள் பலி

Published On 2020-02-17 10:24 GMT   |   Update On 2020-02-17 10:24 GMT
திருவேங்கடம்-கடையநல்லூரில் வி‌ஷம் குடித்த 2 மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

திருவேங்கடம் மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் காளிராஜ். இவரது மகன் அஜய் (வயது16). இவர் திருவேங்கடத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நன்றாக படிக்காததால் அவரை பெற்றோர் கண்டித்தனர்.

இதில் மனம் உடைந்த அஜய் கடந்த 14-ந்தேதி வி‌ஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழியை சேர்ந்தவர் சிவபெருமாள். இவரது மகன் அய்யனார் (21) பட்டப்படிப்பு படித்து வந்த இவருக்கு நன்றாக படிக்க முடியவில்லை. இதனால் நேரம் சரியில்லை வீட்டை மாற்ற வேண்டும் என்று சமீபத்தில் மேல கடையநல்லூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு குடிவந்தனர்.

ஆனால் அய்யனார் தனக்கு இந்த வீடு பிடிக்கவில்லை என்று கூறி தகராறு செய்து வந்தார். இதில் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் வி‌ஷம் குடித்தார். அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News