செய்திகள்
மாணவி கடத்தல்

மதுரையில் கல்லூரி மாணவி கடத்தல்

Published On 2020-02-15 10:12 GMT   |   Update On 2020-02-15 10:12 GMT
மதுரையில் கல்லூரி மாணவியை கடத்தியதாக வாலிபர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:

மதுரை நரிமேடு ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் சுவேதா (வயது 20). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று டியூசனுக்குச் சென்ற சுவேதா, மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.

இதுகுறித்து கரிமேடு போலீசில், கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார். அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர், சுவேதாவை கடத்திச் சென்று இருக்கலாம் என அதில் குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News