செய்திகள்
முக்கூடல் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
முக்கூடல் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கூடல்:
முக்கூடல் அருகே உள்ள சடையப்பபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45), கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் புதியதாக கட்டப்பட்ட வீட்டின் சுவரை மோட்டார் உதவியுடன் தண்ணீர் வைத்து நனைத்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.