செய்திகள்
தற்கொலை

போச்சம்பள்ளி அருகே விஷம் குடித்த பெண் தற்கொலை

Published On 2020-02-11 14:01 GMT   |   Update On 2020-02-11 14:01 GMT
போச்சம்பள்ளி அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்துள்ள தாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாது. இவரது மனைவி கீதா (வயது45). இவர் வயிற்று வலி காரணமாக பல நாட்களாக அவதிப்பட்டு வந்தார். 

இதனால் அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட  கீதா நேற்று வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கீதா பரி தாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News