செய்திகள்
தற்கொலை

கோவை அருகே கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை

Published On 2020-02-09 11:42 GMT   |   Update On 2020-02-09 11:42 GMT
கோவை அருகே கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை சூலூர் அருகே உள்ள பொன்னாங்கன்னியை சேர்ந்தவர் மருதப்பன் (வயது 85). விவசாயி. இவர் கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு காண்ப்பட்டார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல் நலம் சரியாகவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த மருதப்பன் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட மருதப்பனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News