செய்திகள்
கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி

சேலம் வாழப்பாடியில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி

Published On 2020-02-09 04:16 GMT   |   Update On 2020-02-09 04:16 GMT
சேலம் அருகே வாழப்பாடியில் 8 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
சேலம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கிரிக்கெட் மைதானத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. சுமார் 13 ஏக்கர் பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் இந்த கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கிரிக்கெட் மைதானத்தை இன்று காலை 9 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா கோபிநாத் மற்றும் பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News