search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரிக்கெட் மைதானம்"

    • கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு வாரணாசியில் உள்ள கன்ஜாரி என்ற பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த மைதானம் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு வாரணாசியில் உள்ள கன்ஜாரி என்ற பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அந்த இடத்திற்கு பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா, துணை தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    உத்தர பிரதேசத்தில் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானம், லக்னோவில் உள்ள ஏகானா மைதானம் ஆகியவற்றைத் தொடர்ந்து 3வதாக வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளது.

    இந்த மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பாம்பிடம் இருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு வீரர்கள் சென்றனர்.
    • பாம்பு நுழைந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

    கவுகாத்தி:

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. போட்டியின் 7-வது ஓவரின்போது மைதானத்திற்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. இதை கவனித்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக நடுவரிடம் தெரிவித்தனர். 


    மேலும் பாம்பு இருந்த பகுதியில் இருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு அவர்கள் சென்றனர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. உடனடியாக விரைந்து வந்த மைதான பராமரிப்பாளர்கள், கம்பி ஒன்றின் உதவியுடன் பாம்பை பிடித்து சென்றனர். இதையடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.

    • ஆறுமுகநேரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயோனிக் முறையில் குப்பை மேடு அகற்றும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயோனிக் முறையில் குப்பை மேடு அகற்றும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி கணேசன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் குப்பையை அகற்றும் பணிக்கான எந்திரத்தை இயக்கி வைத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    ஆறுமுகநேரியில் நீண்ட காலமாக இருந்து வந்த குப்பைமேடு பிரச்சினைக்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி ரூ.1.44 கோடி செலவில் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குப்பை கொட்டும் இடத்தை மாற்றுவ தற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும் இப்பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஆறுமுகநேரி நகர செயலாளர் நவநீத பாண்டியன், அவைத் தலைவர் சிசுபாலன், மாவட்ட பிரதிநிதி ராதா கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×