என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cricket ground"

    • கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு வாரணாசியில் உள்ள கன்ஜாரி என்ற பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் புதிதாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த மைதானம் ரூ.300 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு வாரணாசியில் உள்ள கன்ஜாரி என்ற பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அந்த இடத்திற்கு பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா, துணை தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    உத்தர பிரதேசத்தில் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானம், லக்னோவில் உள்ள ஏகானா மைதானம் ஆகியவற்றைத் தொடர்ந்து 3வதாக வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட உள்ளது.

    இந்த மைதானம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரஞ்சி டிராபி தொடரின் இன்று தொடங்கிய ஒரு போட்டியில் டெல்லி-ரெயில்வே அணிகள் மோதுகின்றன.
    • டெல்லி அணிக்காக 12 ஆண்டுகளுக்கு பிறகு நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறக்கியுள்ளார்.

    புதுடெல்லி:

    90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப் 2' இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதன் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கின.

    இதில் ஒரு ஆட்டத்தில் டெல்லி-ரெயில்வே அணிகள் மோதுகின்றன. டெல்லி அணிக்காக 12 ஆண்டுகளுக்கு பிறகு நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறக்கியுள்ளார்.

    அவர் ரஞ்சி தொடரில் ஆடுவதால் ரசிகர்கள் அமர்ந்து பார்க்க வசதியாக 3 கேலரிகள் திறந்து விடப்பட்டது. அத்துடன் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

    இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 241 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து டெல்லி அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

    முன்னதாக இந்த ஆட்டத்தில் டெல்லி அணி பீல்டிங்கின்போது விராட் கோலி ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். அத்துடன் அவர் விராட் கோலியை நோக்கி ஒடி அவரது காலில் விழுந்தார். உடனே அவரை விரட்டி சென்ற பாதுகாவலர்கள் தூக்கி நிறுத்தினர். விராட் கோலி, பாதுகாவலர்களிடம் அவரை ஒன்றும் செய்யாமல் பத்திரமாக அழைத்து செல்லுமாறு கூறினார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பாம்பிடம் இருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு வீரர்கள் சென்றனர்.
    • பாம்பு நுழைந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

    கவுகாத்தி:

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. போட்டியின் 7-வது ஓவரின்போது மைதானத்திற்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. இதை கவனித்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக நடுவரிடம் தெரிவித்தனர். 


    மேலும் பாம்பு இருந்த பகுதியில் இருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு அவர்கள் சென்றனர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. உடனடியாக விரைந்து வந்த மைதான பராமரிப்பாளர்கள், கம்பி ஒன்றின் உதவியுடன் பாம்பை பிடித்து சென்றனர். இதையடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.

    ×