search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rahul dravid"

    • இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து விவாதித்தனர்.
    • இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    மும்பை:

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கடந்த வாரம் மும்பையில் சந்தித்து டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து விவாதித்தனர். இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பாண்ட்யா இடம்பெற நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிகளவில் பந்து வீச வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் இந்த கருத்து ரோகித் சர்மா அளித்த பதில் பின்வருமாறு:-

    நாங்கள் இதுவரை சந்திக்கவே இல்லை. நானோ அல்லது ராகுல் அல்லது அஜித்தோ அல்லது பிசிசிஐயின் யாரோ ஒருவர் கேமரா முன் வந்து பேசுவதை நீங்கள் கேட்காத வரையில், எதையும் நம்பவேண்டாம். அதேபோல உலகக்கோப்பையில் நானும் கோலியும் தொடக்க வீரர்களாக இறங்குவது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கவில்லை என ரோகித் சர்மா கூறினார்.

    மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக விளையாடி வரும் ஹர்திக் பாண்ட்யா 6 போட்டிகளில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் அவர் பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே பாண்ட்யா 4 ஓவர்களை வீசியுள்ளார்.

    டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒரு ஓவரை மட்டுமே வீசினார். சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான போட்டியில், பாண்ட்யா 3 ஓவர்கள் வீசினார். ஆனால் எதிலும் சிறந்த செயல்பாடு இல்லை. 

    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் தொடர் நாயகன் விருது பெற்றார்.
    • ஜெய்ஸ்வால் இந்த தொடரில் 2 இரட்டை சதம் உள்பட மொத்தம் 712 ரன்கள் குவித்தார்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் இந்த தொடரில் 2 இரட்டை சதம் அடித்தார். 5 டெஸ்டில் மொத்தம் 712 ரன்கள் குவித்தார்.

    டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்து அணி கடைபிடித்து வருகிறது. நியூசிலாந்து முன்னாள் கேப்டன் மெக்கலம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இது பேஸ்பால் யுக்தி என அழைக்கப்படுகிறது.

    இதற்கிடையே, ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடியதற்காக எங்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும் என இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்திருந்தார்.

    அவரது இந்த மட்டமான கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டிவி வர்ணனையாளருமான நாசர் உசேன், ஜெய்ஸ்வால் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவில்லை. அவர் வளர்ப்பில் இருந்தே ஆக்ரோஷமாக ஆடுவதை கற்றுக் கொண்டார் என தக்க பதிலடி கொடுத்தார்.

    இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், எங்கள் அணியில் ரிஷப் பண்ட் என்று ஒருவர் இருக்கிறார். அவரது அதிரடியான ஆட்டத்தை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். ஒருவேளை ரிஷப் பண்ட் விளையாடுவதை பென் டக்கெட் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை என்றார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக ஜெய்ஸ்வால் முதல் முறையாக வாய் திறந்துள்ளார். அவர் கூறியதாவது:

    நான் அதைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்தேன். கடந்த 9 மாதத்தில் என்னுடைய பேட்டிங் முன்னேற்றத்துக்கு கேப்டன ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட்தான் காரணம்.

    வீரர்களின் அறையில் ரோகித் சர்மா இருப்பது மிகவும் நன்மையாகும். அவரது தலைமையின் கீழ் விளையாடியது சிறப்பாக இருந்தது. அவரிடம் இருந்து நான் நிறைய கற்று வருகிறேன். நான் இந்த இருவரிடமும் நிறைய பேசி இருக்கிறேன். அவர்களது ஆலோசனை பெரிதும் உதவியது என தெரிவித்தார்.

    • இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்தத்தில் யார் இடம் பெற வேணடும் என்பதை நான் முடிவு செய்யவில்லை.
    • நானும், கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டியில் ஆடக்கூடிய 11 வீரர்களை மட்டுமே தேர்வு செய்வோம்.

    தர்மசாலா:

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ஷ்ரேயாஸ் அய்யர், இஷான்கிஷன் ஆகியோர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் நீக்கப் பட்டனர். இருவரும் முதல் தர போட்டியான ரஞ்சி டிராபியில் விளையாட மறுத்ததால் பி.சி.சி.ஐ. இந்த நடவடிக்கையை எடுத்தது.

    கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. ஒட்டு மொத்தத்தில் இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இந்த விவகாரம குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாய் திறந்துள்ளார். பி.சி.சி.ஐ.யின் ஒப்பந்தத்தை நான் முடிவு செய்யவில்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் டிராவிட் கூறியதாவது:-

    இந்திய அணியில் இடம் பெறுவதற்கான பட்டியலில் அவர்கள் (இஷான்கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர்)எப்போதும் இருக்கிறார்கள். யாரும் அணியில் இடம்பெற முடியாது என்பது கிடையாது. உள்ளூர் போட்டிகளில் விளையாடும் அனைவருமே இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி தேர்வு குழுவினர்களின் கவனத்தை பெறவேண்டும்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்தத்தில் யார் இடம் பெற வேணடும் என்பதை நான் முடிவு செய்யவில்லை. ஒப்பந்தம் தொடர்பான முடிவுகளை கிரிக்கெட் வாரியமும், தேர்வு குழுவினரும் தான் எடுப்பார்கள். இதற்கான அளவுகோல் என்ன என்பது கூட எனக்கு தெரியாது.

    நானும், கேப்டன் ரோகித் சர்மாவும் போட்டியில் ஆடக்கூடிய 11 வீரர்களை மட்டுமே தேர்வு செய்வோம். ஒரு வீரருக்கு ஒப்பந்தம் உள்ளதா? இல்லையா? அவர் தேர்வு செய்யப்படுவாரா என்பதை நாங்கள் ஒருபோதும் ஆலோசித்தது கிடையாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராகுல் டிராவிட் டெஸ்டில் 36 சதமும், ஒரு நாள் போட்டியில் 12 செஞ்சூரியும் (மொத்தம் 48) அடித்துள்ளார்.
    • ரோகித் சர்மா டெஸ்டில் 12 சதமும், ஒரு நாள் போட்டியில் 31 மற்றும் 20 ஓவரில் 5 சதமும் அடித்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 162 பந்துகளில் 13 பவுண்டரி, 3 சிக்சருடன் 103 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் அவர் 2-வது சதம் அடித்துள்ளார். ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் 131 ரன் எடுத்து இருந்தார்.

    59-வது டெஸ்டில் விளையாடி வரும் ரோகித் சர்மா நேற்று தனது 12-வது சதத்தை பதிவு செய்தார். ஒட்டு மொத்த சர்வதேச போட்டிகளில் 48-வது செஞ்சூரியை அடித்தார். இதன் மூலம் அவர் முன்னாள் கேப்டனும், தற்போதைய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டை சமன் செய்தார்.

    36 வயதான ரோகித் சர்மா டெஸ்டில் 12 சதமும், ஒரு நாள் போட்டியில் 31 மற்றும் 20 ஓவரில் 5 என ஆக மொத்தம் 48 சதங்களை பதிவு செய்துள்ளார்.

    ராகுல் டிராவிட் டெஸ்டில் 36 சதமும், ஒரு நாள் போட்டியில் 12 செஞ்சூரியும் (மொத்தம் 48) அடித்துள்ளார்.

    இருவரும் தற்போது 10-வது இடங்களில் உள்ளனர். தெண்டுல்கர் 100 சதத்துடன் முதல் இடத்திலும், விராட் கோலி 80 செஞ்சூரியுடன் 2-வது இடத்திலும், ரிக்கி பாண்டிங் 71 சதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 4-வது சதத்தை (14 போட்டி) ரோகித் சர்மா எடுத்தார். இதன் மூலம் அவர் கவாஸ்கர் சாதனையை சமன் செய்தார். கவாஸ்கர் 38 டெஸ்டில் 4 சதம் எடுத்து இருந்தார்.

    இங்கிலாந்துக்கு எதிராக ராகுல் டிராவிட், தெண்டுல்கர் தலா 7 செஞ்சூரியும், அசாருதீன் 6 சதமும், வெங்சர்க்கார், விராட் கோலி தலா 5 செஞ்சூரியும் அடித்துள்ளனர்.

    • இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா சதமடித்தார்.
    • இது சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் 48-வது சதமாகும்.

    தரம்சாலா:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 218 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 52 ரன்களுடனும், சுப்மன் கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்தார்.

    இதற்கிடையே, இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆட்டம் அதிரடியாக விளையாடினர்.

    ரோகித் சர்மா 154 பந்தில் சதமடித்தார். இந்தத் தொடரில் அவரின் 2-வது சதம் இதுவாகும். டெஸ்ட் போட்டிகளில் 12-வது சதமாகும்.

    சுப்மன் கில்லும் சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 103 ரன்னில் அவுட்டானார். சுப்மன் கில் 110 ரன்னில் வெளியேறினார்.

    இரண்டாம் நாள் இறுதியில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 473 ரன்கள் குவித்துள்ளது. தற்போது இங்கிலாந்தை விட 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா

    இந்நிலையில், இன்று சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் 48-வது சதம் இதுவாகும்.

    ஒருநாள் கிரிக்கெட்டில் 31 சதங்களும், டி20 கிரிக்கெட்டில் 5 சதங்களும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 சதங்களையும் ரோகித் சர்மா அடித்துள்ளார். இதன்மூலம் அதிக சதங்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட் சாதனையை இவர் சமன் செய்தார்.

    • இந்திய அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது அபாரமாக இருக்கிறது.
    • ஆனால் அனைவராலும் அப்படி செயல்பட முடியாது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் ஏற்கனவே இந்தியா தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்த தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஜத் பட்டிதாருக்கு கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பார் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரஜத் பட்டிதார் யாரும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்பாத தொடரைக் கொண்டுள்ளார். ஆனால் இது போன்ற சூழ்நிலையிலும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதே இந்த இந்திய அணியின் நல்ல அம்சம் மற்றும் கலாச்சாரமாகும். ஏனெனில் இத்தொடரில் மகத்தான கிரிக்கெட்டை விளையாடி வரும் அவர்களுக்கு சாதகமாக முடிவுகள் வந்துள்ளன.

    ஒருவேளை ரஜத் பட்டிதாரின் அணுகுமுறை மற்றும் உடைமாற்றும் அறையில் அவருடைய கேரக்டர் பிடிக்கும் அளவுக்கு இருந்தால் ரோகித் மற்றும் தேர்வுக் குழுவினர் தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார்கள்.

    அதனால் இந்த தொடரில் ரன்கள் அடிக்காவிட்டாலும் அவருக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று அவர்கள் முடிவெடுப்பார்கள். இந்திய அணியில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது அபாரமாக இருக்கிறது. ஆனால் அனைவராலும் அப்படி செயல்பட முடியாது. அது இளம் வீரர்களும் மோசமான தருணத்தை சந்திப்பார்கள் என்பதை புரிந்து கொண்டுள்ள இந்திய அணியின் கலாச்சாரத்தை எனக்கு காண்பிக்கிறது.

    இவ்வாறு ஏபிடி கூறினார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இந்த வெற்றி மூலம் தற்போது பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் சாதனையை ரோகித்சர்மா முறியடித்தார்.

    ராஞ்சி:

    இங்கிலாந்துக்கு எதிராக ராஞ்சியில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    192 ரன் இலக்கை எடுக்க இந்திய அணி 5 விக்கெட்டை இழந்தது. இதனால் இந்த டெஸ்டில் பரபரப்பு ஏற்பட் டது. 6-வது விக்கெட்டுக்கு சுப்மன்கில் (52 ரன்)-ஜூரல் (39 ரன்) ஜோடி பொறுப்புடன் விளையாடி வெற்றியை தேடி தந்தது.

    இந்த வெற்றி மூலம் ரோகித் தலைமையிலான இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்திலும், 3-வது டெஸ்டில் 434 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.

    இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7-ந்தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.

    ரோகித் தலைமையில் இந்திய அணிக்கு டெஸ்டில் கிடைத்த 9-வது வெற்றியாகும். 4 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 2 டெஸ்ட் 'டிரா' ஆனது. வெற்றி சதவீதம் 60.00 ஆகும்.

    இந்த வெற்றி மூலம் தற்போது பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டை ரோகித்சர்மா முந்தினார். டிராவிட் தலைமையில் 25 டெஸ்டில் 8-ல் வெற்றி கிடைத்தது. 6 போட்டியில் தோல்வி ஏற்பட்டது. 11 டெஸ்ட் 'டிரா' ஆனது.

    மேலும் பட்டோடி, கவாஸ்கர் ஆகியோரை ரோகித்சர்மா சமன் செய்தார். இருவரது தலைமையிலும் 9 டெஸ்டில் வெற்றி கிடைத்து இருந்தது.

    விராட்கோலி 40 வெற்றியுடன் (68 டெஸ்ட்) முதல் இடத்திலும், டோனி 27 வெற்றியுடன் (60 டெஸ்ட்) 2-வது இடத்திலும், கங்குலி 21 வெற்றியுடன் (49 டெஸ்ட்) 3-வது இடத்திலும், அசாருதீன் 14 வெற்றியுடன் (47 டெஸ்ட்) 4-வது இடத்திலும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தப்படியாக ரோகித் உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான ரோகித் பெற்ற 3-வது வெற்றியாகும். இதன்மூலம் அவர் டோனி, அசாருதீன், அஜீத் வடேகர் ஆகியோரை சமன் செய்தார். விராட் கோலி 10 வெற்றியுடன் (18 டெஸ்ட்) முதல் இடத்தில் உள்ளார்.

    • தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தெரிவித்தார்.
    • பணிச்சுமையை நிர்வகிப்பதற்காகவே இஷான் கிஷனுக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டதாக டிராவிட் தெரிவித்தார்.

    தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தெரிவித்தார். மேலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு தமக்கு அனுமதி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு உடனடியான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு பொய் சொல்லிவிட்டு நன்னடத்தையின்றி நடந்து கொண்ட காரணத்தாலேயே இஷான் கிஷன் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

    பணிச்சுமையை நிர்வகிப்பதற்காகவே அவருக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டதாக டிராவிட் தெரிவித்தார். மேலும் இந்திய அணியில் மீண்டும் இஷான் கிஷன் விளையாடுவதற்கு உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று சில போட்டிகளில் விளையாடி ஃபார்முக்கு திரும்பி கம்பேக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் முழு உடற்தகுதியை பெற்ற நிலையிலும் ரஞ்சி கோப்பை தொடரை இளம் வீரர்கள் புறம்தள்ளுகிறார்கள். இதனால் இந்திய அணியில் உள்ள வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கும் ரஞ்சி கோப்பை விளையாடுவதை கட்டாயமாக்க பிசிசிஐ பரிசீலனை செய்து வருதவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இஷான் கிஷனை ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடச் சொல்லி பிசிசிஐ வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தெரிவித்தார்.
    • பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காகவே அவருக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தெரிவித்தார். மேலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு தமக்கு அனுமதி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு உடனடியான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதலிண்டு போட்டிகளில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு பொய் சொல்லிவிட்டு நன்னடத்தையின்றி நடந்து கொண்ட காரணத்தாலேயே இஷான் கிஷன் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

    இருப்பினும் அதை மறுத்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காகவே அவருக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் இந்திய அணியில் மீண்டும் இஷான் கிஷன் விளையாடுவதற்கு உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று சில போட்டிகளில் விளையாடி ஃபார்முக்கு திரும்பி கம்பேக் கொடுக்க வேண்டும் என்றும் டிராவிட் கேட்டுக் கொண்டிருந்தார்.

    ஆனால் அவர் கூறியதற்கு நேர்மாறாக ரஞ்சிக் கோப்பை போட்டியில் தன்னுடைய மாநில அணியான ஜார்கண்ட் அணிக்கு விளையாட இஷான் கிஷன் எந்த விருப்பத்தையும் காட்டவில்லை. குஜராத்துக்கு சென்று அங்குள்ள கிரண் மோர் அகாடமியில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

    அங்கே ஏற்கனவே ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணால் பாண்டியா ஆகியோர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது அவர்களுடன் சேர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான பயிற்சிகளை இஷான் கிஷன் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில் இந்திய அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்பு தயாராக இருக்கும் போது ராகுல் டிராவிட் பேச்சைக் கேட்காமல் இஷான் கிஷன் இப்படி நடந்து கொள்வது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • இதை இரட்டை சதமாக மாற்றி கடைசி வரை அணிக்காக விளையாட விரும்புகிறேன்.
    • தற்போதைய நிலைமையிலிருந்து நாளை இன்னும் இந்திய அணியை சிறப்பாக மீட்க விரும்புகிறேன்.

    இந்தியா - இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 179 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்நிலையில் இந்த இன்னிங்சை கடைசி வரை நின்று பெரியதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை ராகுல் சார் மற்றும் ரோகித் பாய் எனக்கு கொடுத்துள்ளனர் என ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் ஒவ்வொரு செஷனாக விளையாட விரும்பினேன். அவர்கள் நன்றாகப் பந்துவீசும்போது, நான் அந்த ஸ்பெல்லைக் கடக்க விரும்பினேன். ஆரம்பத்தில், விக்கெட் ஈரமாக இருந்தது மற்றும் ஸ்பின் மற்றும் பவுன்ஸ் இருந்தது. சிறிது சீம் இருந்தது. அதில் நான் சுமாரான பந்துகளை அடித்து கடைசி வரை விளையாட முயற்சித்தேன். இதை இரட்டை சதமாக மாற்றி கடைசி வரை அணிக்காக விளையாட விரும்புகிறேன்.

    குறிப்பாக தற்போதைய நிலைமையிலிருந்து நாளை இன்னும் இந்திய அணியை சிறப்பாக மீட்க விரும்புகிறேன். காலையில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்த பிட்ச் பின்னர் செட்டிலானது. இந்த இன்னிங்சை கடைசி வரை நின்று பெரியதாக மாற்றச் சொன்னார்கள். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருங்கள் என ராகுல் சார் மற்றும் ரோகித் பாய் எனக்கு நம்பிக்கை அளித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 50 ரன்னை தாண்டுவதற்கு மற்றவர்கள் கஷ்டப்பட்ட போது போப் 196 ரன்கள் குவித்தது சிறப்பானது.
    • இங்கிலாந்து வீர் ஹார்ட்லேவுக்கு இந்த டெஸ்ட் மிகவும் அபாரமானது.

    ஐதராபாத்:

    இங்கிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்தியா 28 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 231 ரன் இலக்கை எடுக்க முடியாமல் தோற்றது மிகவும் பரிதாபமே.

    இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியதாவது:-

    இங்கிலாந்தின் வெற்றிக்கு ஆலி போப் காரணமாக திகழ்ந்தார். அவரது ஆட்டம் முற்றிலும் மாறுபட்டு இருந்தது. அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டார். அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. 50 ரன்னை தாண்டுவதற்கு மற்றவர்கள் கஷ்டப்பட்ட போது இவர் 196 ரன்கள் குவித்தது சிறப்பானது. எஸ்.பரத்-அஸ்வின் ஜோடி போராடியது பாராட்டத்தக்கது. நாங்கள் முதல் இன்னிங்சில் இன்னும் கூடுதலாக 70 முதல் 80 ரன்கள் எடுத்து இருக்க வேண்டும். இங்கிலாந்து வீர் ஹார்ட்லேவுக்கு இந்த டெஸ்ட் மிகவும் அபாரமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென் ஆப்பிரிக்காவில் ராகுல் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
    • தொடரை சமன் செய்ய எங்களுக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.

    ஐதராபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட மாட்டார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ராகுல் இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாட மாட்டார். அதுபற்றி அணி தேர்விலேயே நாங்கள் தெளிவாக உள்ளோம். நாங்கள் இரண்டு விக்கெட் கீப்பர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம். தென் ஆப்பிரிக்காவில் ராகுல் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். உண்மையிலேயே அவர் சிறப்பாக விளையாடினார். தொடரை சமன் செய்ய எங்களுக்கு மிகப்பெரிய பங்காற்றினார்.

    ஆனால் ஐந்து டெஸ்ட் போட்டிகளை கருத்தில் கொண்டும், இங்குள்ள சூழ்நிலையை பொறுத்தும் விக்கெட் கீப்பர் இடத்திற்கு மற்ற இரண்டு வீரர்களிடையே (கே.எஸ்.பரத் மற்றும் துருவ் ஜூரல்) போட்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    ×