செய்திகள்
மதுரை நகைக்கடை அதிபரிடம் ரூ.1¼ கோடி மோசடி
மதுரை அருகே நகைக்கடை அதிபரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை ஆத்திக்குளம் கனகவேல் காலனி, நேரு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தெற்கு ஆவணி மூல வீதியில் நகைக்கடை வைத்துள்ளார்.
இந்த நிலையில் அவர், மதுரை குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மதுரை கீழ வெளி வீதியில் ரெஸ்டாரண்டு நடத்தி வருபவர் ஷாமா. இவரது தாய் மகாலட்சுமி, மனைவி ஜான்சிராணி. இவர்கள் 3 பேரும் சில மாதங்களுக்கு முன்பு சி.எம்.ஆர்.ரோட்டில், எங்களுக்கு சொந்தமாக 2880 சதுர அடி மனை உள்ளது. அதை வாங்கிக்கொள்ளுங்கள் என கூறினர்.
இதையடுத்து மனையை வாங்குவதற்காக அவர்களிடம் ரூ. 1 கோடியே 30 லட்சம் கொடுத்தேன். பணத்தை பெற்றுக்கொண்ட பின் நீண்ட நாட்களாகியும் மனையை எனது பெயருக்கு மாற்றித்தரவில்லை. பணத்தையும் திருப்பித்தர மறுக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை ஆத்திக்குளம் கனகவேல் காலனி, நேரு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தெற்கு ஆவணி மூல வீதியில் நகைக்கடை வைத்துள்ளார்.
இந்த நிலையில் அவர், மதுரை குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மதுரை கீழ வெளி வீதியில் ரெஸ்டாரண்டு நடத்தி வருபவர் ஷாமா. இவரது தாய் மகாலட்சுமி, மனைவி ஜான்சிராணி. இவர்கள் 3 பேரும் சில மாதங்களுக்கு முன்பு சி.எம்.ஆர்.ரோட்டில், எங்களுக்கு சொந்தமாக 2880 சதுர அடி மனை உள்ளது. அதை வாங்கிக்கொள்ளுங்கள் என கூறினர்.
இதையடுத்து மனையை வாங்குவதற்காக அவர்களிடம் ரூ. 1 கோடியே 30 லட்சம் கொடுத்தேன். பணத்தை பெற்றுக்கொண்ட பின் நீண்ட நாட்களாகியும் மனையை எனது பெயருக்கு மாற்றித்தரவில்லை. பணத்தையும் திருப்பித்தர மறுக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.