செய்திகள்
கைது

ஆவடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

Published On 2020-02-01 09:46 GMT   |   Update On 2020-02-01 09:46 GMT
ஆவடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடி:

ஆவடி, கோவில்பதகை உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்தன. இதனால் இரவு நேரங்களில் சந்தேக நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடியில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த போலீசாரிடம் திருவண்ணாமலையை சேர்ந்த வாலிபர்கள் 2 பேர் சிக்கினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் செல்வம் (32), கார்த்திக் (36) என்பதும், ஆவடி, காமராஜர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News