செய்திகள்
கைது

களக்காட்டில் மதுபாட்டில்கள் பதுக்கிய தொழிலாளி கைது

Published On 2020-01-29 11:16 GMT   |   Update On 2020-01-29 11:16 GMT
களக்காட்டில் மதுபாட்டில்கள் பதுக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு:

களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் வடகரை டாஸ்மாக் கடை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு பிராஞ்சேரியை சேர்ந்த தொழிலாளி மாரியப்பன் (வயது 44) ஒரு சாக்குபையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 3 மது பாட்டில்கள், ரூ, 120 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News