செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே கட்டிடத்துக்கு வர்ணம் பூசிய பெயிண்டர் கீழே விழுந்து பலி
ஊத்துக்கோட்டை அருகே கட்டிடத்துக்கு வர்ணம் பூசிய பெயிண்டர் கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
சென்னை புளியந்தோப்பு ஆசிர்வாதபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (28). பெயிண்டர். இவருக்கு சுசித்ரா (26) என்ற மனைவியும், தேஜஸ்வரன் (3) என்ற மகனும் உள்ளனர். கார்த்திக் நேற்று ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாயில் உள்ள தனியார் கட்டிடத்துக்கு சாரம் கட்டி வர்ணம் பூசிக் கொண்டிருந்தார்.
அப்போது கால் தடுமாறியதால் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனே அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.